புதுச்சேரி பெரிய காலப்பட்டு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
புதுவை (RNI) புதுவை மாநிலம் உழவர்கரை நகராட்சி பெரிய காலப்பட்டு பகுதி எழுந்தருளி யிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றி உள்ள கிராம மக்கள் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் பொதுமக்கள் நலம் கருதி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

