உடனடி கடன் ஆப் மூலம் மோசடி – மார்பிங் செய்து மிரட்டியதை தொடர்ந்து ரூ. 63,089 இழந்த இளைஞர்!
புதுச்சேரி (RNI) புதுச்சேரியைச் சேர்ந்த இளையரசன் என்பவர் "ஃபிங்கர்" என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்றதாகவும், அதன்படி, கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, புகார்தாரர் கடன் தொகையை உரிய தேதிக்கு முன்பே திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் வங்கதேச எண்ணுள்ள நம்பரிலிருந்து வாட்ஸ்அப் மூலம் புகார்தாரரை தொடர்புகொண்டு, உரிய தொகையை செலுத்துமாறு மிரட்டியுள்ளார். புகார்தாரர் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் இருந்ததையடுத்து, அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, பணத்தை செலுத்துமாறு மிரட்டுயுள்ளார். மேலும், அவரது மார்பிங் மற்றும் ஆபாசமான புகைப்படங்களை அவரது தொடர்புள்ள நபர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதாக புகார்தாரரை மிரட்டி அனுப்பி உள்ளார். தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக, புகார்தாரர் ரூ. 63,089/- வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இருப்பினும், மேற்படி நபர் மிரட்டி தொந்தரவு செய்ததையடுத்து, ஆய்வாளர் தியாகராஜன் அவர்களால் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
மேற்படி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS அவர்களுடைய உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில் விசாரணையின் அடுத்த கட்டத்திற்கான பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டது, மேற்படி சைபர் கிரைம் tools-களின் மூலம் விசாரனை மேற்கொண்டதில், அசிமுதீனை அடையாளம் காணப்பட்டு, பின்னர், முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்கள் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில், உதவி ஆய்வாளர் சந்தோஷ், காவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், அஜித்குமார், தேவா மற்றும் பெண் காவலர் ரோஸ்லைன் மேரி ஆகியோர்களை கொண்ட தனிப்படை போலிசார்கள் மேற்கொண்ட விசாரனையில், அவர் தனது வங்கிக் கணக்குச் சான்றுகளை தனது நண்பர் சதாம் அன்சாரி (34) த/பெ தமீன் அன்சாரிக்கு வழங்கியதாகக் கூறினார்.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட சதாம் அன்சாரி (34) த/பெ தாமீன் அன்சாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், குற்றத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது துபாயில் வசிப்பவர் என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் வங்கிக் கணக்கு விவரங்களை துபாயில் இருக்கும் மோசடி நபரிடம் பகிர்ந்து கொண்டார் என்றும், அதில் அவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட மோசடி பணத்தை எடுக்குமாறு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அறிவுறுத்தியதின்பேரில், சதாம் அன்சாரி மோசடி பணத்தை ATM மூலம் எடுத்து, மேற்படி நபரின் அறிவுறுத்தலின்படி பல்வேறு சைபர் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். மேற்படி நபர் சுமார் 95 லட்சம் ATM மூலம் பணம் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை அனைத்து மேற்படி நபரின் அறிவுறுத்தலின்படி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இதனால், குற்றவாளி சதாம் அன்சாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இந்த குற்றத்தில் ஈடுப்பட்டுள்ளார் வெளிநாட்டில் இருக்கும் சில நபர்கள் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. குற்றவாளியைக் கைது செய்வதில் திறமையான நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் காவல்துறையினரை மூத்த காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பாராட்டினார்.
இது சம்மந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா IPS பொதுமக்களுக்கு கூறுவது என்னவென்றால் செல்போனில் வருகின்ற உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம் என்றும், கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டப்படுகின்றனர். மேலும், அந்த மார்பிங்க் செய்த புகைப்படங்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பல மடங்கு அதிகமாக பணத்தை பறிக்கப்படுகுகின்றன. ஆகவே பொதுமக்கள், உடனடி லோன் ஆப்-பிள் இருந்து கடன் வாங்க வேண்டாம் என இணைய வழி காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. மேலும், இது போன்று புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் அறிவுறுத்துகின்றனர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?






